இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே வேதனையுடன் வெளியிட்ட புகைப்படம்!!

குப்பைகளை குப்பை தொட்டியில் தான் கொட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி மஹேலா ஜெயவர்தனே புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே விளையாட்டு தொடர்பாக மட்டுமின்றி சமூக நலம் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் சமூகவலைதளங்களில் தன்னுடய கருத்துகளை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில் இலங்கையில் உள்ள ஒரு சாலை ஓரத்தில் குப்பை தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குப்பைகள் அதில் கொட்டப்படாமல் குப்பை தொட்டிக்கு வெளியில் கொட்டப்பட்டுள்ளது.

இதோடு அவர் வெளியிட்ட பதிவில், இது அவ்வளவு கடினம் கிடையாது! குப்பைகள் தொட்டியின் உள்ளே தான் இருக்க வேண்டும், அதன் பக்கத்தில் இருக்க கூடாது என வேதனை தெரிவித்துள்ளார்.