வயிற்றுவலியால் துடித்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கேரளாவில் 12 வயது சிறுமி கர்ப்பமாக இருந்த சம்பவம் பெற்றொர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் சில தினங்களாக 12 வயது சிறுமி ஒருவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் அவரை சோதிப்பதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, சிறுமியை சோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை கவுன்சிலிங் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர் அந்த சிறுமியை கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக அந்த சிறுமியை மிரட்டி அவருடன் அந்த ஆசிரியர் உறவிலும் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள ஆசிரியரை தீவிரவமாக தேடி வருகின்றனர்.