என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்!! பிக்பாஸ் போட்டியாளர்

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த வருடம் பிக்பாஸ் தொடர் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக உள்ளே வந்த கஸ்தூரி, மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். இந்த வார எவிக்‌ஷனாக அபிராமி வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியிலிருந்து பிக்பாஸ் போட்டியாளர் நடிகை ரோஹினி நோனி வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க முயற்சி செய்தேன், ஆனால், அப்படி நடிக்க வாய்ப்பு தேடும் போது பல இடங்களில் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். ஆனால், நான் அப்படி செய்தால் தான் நடிக்க வேண்டுமா என அந்த வாய்ப்புகளே வேண்டாம் என கூறிவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.