மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் மரணம்!

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் பாபுலால் கவுர் (வயது 89). இவர் வயது முதிர்ச்சி மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததால், போபால் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாபுலால் கவுர் காலமானார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முன்னணி தலைவராக விளங்கிய பாபுலால் கவுர், கடந்த 2004ம் ஆண்டியின் இருந்து 2005ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார்.

தற்போது அவரது மறைவுக்கு பிரதமர்மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.