பாடகி சின்மயியை அதிர்ச்சியாக்கிய படுகொலை சம்பவம்!

Me Too ல் அண்மைகாலமாக சமூகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் அவர் இது குறித்து குரல் எழுப்பி வருகிறார். அண்மையில் மதுரையில் 15 வயது சிறுமி வைகை பாலத்தின் அருகே 21 வயது மகேஸ்வரன் என்ற இளைஞரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்.

அப்போது அந்த பகுதி வழியாக சென்ற மணிகண்டன் அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அந்த சிறுமியை மீட்டுள்ளார்.

இதனால் குற்றவாளி மகேஸ்வரன் மன்னிப்பு கேட்டதோடு, இனி இதுபோல நடக்காது எனவும் கூறியுள்ளான். அவனை மன்னித்துவிட்டது அவன் அங்கிருந்து சென்றுவிட்டனாம்.

இந்த சம்பவம் நடைபெற்று மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மணிகண்டன் தன் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இதனால் போலிஸ் விசாரணையை தொடங்க அவரை கொலை செய்தது அந்த குற்றவாளி மகேஸ்வரன் மற்றும் அவனுடைய இரு நண்பர்கள் தானாம்.

போலிசார் அந்த மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தை சின்மயி குறிப்பிட்டு அந்த நபரின் குடும்பத்திற்கு நிதி திரட்டி கொடுத்து உதவ வேண்டும் என கூறியுள்ளார்.