14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

வடக்கு ஆப்பிரிக்காவில் 14 வயது சிறுவன், பாலியல் இன்பத்திற்காக துணி தைக்கும் ஊசியை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tunisia நாட்டின் Tunis பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், மூன்று தினங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது முதலில் காரணம் என்ன என்று தெரியாமல் தவித்த மருத்துவர்கள் அதன் பின் ஸ்கேன் செய்து பார்த்த போது, அவருடைய மர்ம உறுப்பில், துணி தைக்கும் ஊசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட சிகிச்சையில், மர்ம உறுப்பில் இருந்து 9 செ.மீற்றர் நீளமுள்ள ஊசியை நீக்கியுள்ளனர்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவன் பாலியல் இன்பத்திற்காக ஊசியை பயன்படுத்தியுள்ளான், அதுவே இறுதியில் விபரீதத்தில் முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி சிகிச்சைக்கு பின் சிறுவனை மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

அப்போது அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் நல்ல நிலையில் இருக்கிறான், அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார், இதையடுத்து சிகிச்சை முடிந்த அடுத்த நாளே சிறுவன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில், இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. என்ன தான் பாலியல் பொம்மைகள் விற்கப்பட்டாலும், பாலியல் இன்பத்திற்காக சிலர் வயர், ஸ்டரா, சிறிய வகை பல்ப்புகள் போன்றவை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.