தமிழர்கள் கருணா சொல்வதை செய்வார்களா?

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸவை அறிமுகம் செய்து வைக்கும் மாபெரும் மாநாடு நேற்று இடம்பெற்றது.

இதில் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டதுடன், சில தமிழ் அரசியல்வாதிகளையும் காணக்கூடியதாக இருந்தது.

அந்த வகையில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் குறித்த மாநாட்டுக்குச் சென்றிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கருணா,

வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.