மஹிந்தவிடம் வரதராஜப் பெருமாள் சரனாகதி!

பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளதாக வரதராஜப் பெருமாள் அறிவித்துள்ளார்.

வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலவர் வரதராஜப் பெருமாள் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐந்து தடவைகளுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினால் வடக்கு- கிழக்கு மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப் பெறவில்லை.

அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுணவின் வேட்பாளர் ஊடாக வடக்கு-கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள் கிடைக்கப் பெற்று அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு

அந்த வகையில் எனது தலைமையிலான தமிழ் சமூக ஜனநாயக கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது என்றும் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு ஒன்றிணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலவர் வரதராஜப் பெருமாள் 1989ம் ஆண்டு தமிழீழ பிரகடனம் செய்திருந்தார் குறிப்பிடத் தக்கது.