சிறை தண்டனை பெற்ற தமிழக முன்னாள் எம்.பி திடீர் மரணம்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான இரா அன்பரசு சற்றுமுன் காலமானார். அவர் மூன்று முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதியிலிருந்தும், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக அன்பரசு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வாகி இருந்தார். இன்று அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் காலமாகி உள்ளார்.

இவர் செக் மோசடி வழக்கு ஒன்றில் மூன்று வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தண்டனையை உறுதி செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கடந்த மாதம் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் உடல்நிலை குறைவால் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருடைய மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.