பாகுபலி பட நடிகர் கைது..!

பாகுபலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மது பிரகாஷ் தெலுங்கு தொலைகாட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஆந்திரா மாநிலம் துறை சார்ந்த பாரதி என்ற பெண்ணும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் பாரதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து. பாரதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பிரகாஷ் மீது புகார் அளித்தனர். மது பிரகாஷ் வீட்டிற்கு நேரத்திற்கு வராமல் இருந்தால் அவருக்கும் மனைவி பாரதிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மேலும் மது பிரகாஷ்க்கு வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தின்போது ரூபாய் 15 இலட்சம் வரதட்சணை கொடுத்தோம். மேலும் வரதட்சணை கேட்டு மது பிரகாஷ் எங்கள் மகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். அவரின் கொடுமை தாங்க முடியாமல் எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என பாரதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாரதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.