பிக்பாஸில் கஸ்தூரிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா.?

புதிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அறிமுகமாகி இருப்பவர் தான் நடிகை கஸ்தூரி. இவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

100 நாட்கள் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 47 நாட்களை பல கலவையான அனுபவங்களை கொடுத்து கடந்துள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போதுவரை பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, சரவணன், மீரா மிதுன், ரேஷ்மா, ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

இந்த வாரம் அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி உள்ளிட்டோரின் பெயர்கள் நாமினேஷன் பட்டியலில் இருக்கின்றது. இந்த வார இறுதியில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பது உறுதி.

இந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இதற்கான புரமோஷன் வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டு இருக்கின்றது. கஸ்தூரி தனக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டதாக சக போட்டியாளர்கள் மத்தியில் கூறிக்கொள்கிறார்.

தொடர்ந்து இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் ஜெயில் தண்டனை இருக்காது என்றும் அவர் கூற பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ந்துள்ளனர். அவருக்குள்ள ஸ்பெஷல் பவரை கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தண்டனையாக கொடுக்கும் கஸ்தூரி சாக்‌ஷியை தலைகீழ் நிற்க வேண்டும் என தெரிவிக்கிறார்.

கஸ்தூரி உள்ளே வந்த பின்னர் பிக்பாஸ் வீட்டில் இனி பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என பார்வையாளர்கள் ஆவலாக இருக்கின்றனர்.