பாகுபலி நாயகன் பிரபாஸ்க்கு விரைவில் திருமணமாம்!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தில் நடித்ததிற்கு பிறகு சினிமாவில் இவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து இவர் வாங்கும் சம்பளமும் அதிகமானது. பாகுபலி படம் தமிழிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதால் தமிழ் நாட்டிலும் அவருக்கென தனி மார்க்கெட் உள்ளது.

பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடத்த தெலுங்கு படங்களை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது சாஹோ என்ற படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இயக்குனர் சுஜித் இயக்கி உள்ள இந்த படத்தை சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது.

தற்போது, 39 வயதான பிரபாசுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் சாஹோ படம் திரைக்கு வந்ததும் திருமண ஏற்பாடுகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க தொழில் அதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் நிச்சயதார்த்தத்தை முடிக்க திட்டமிட்டு இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருடத்தின் இறுதியில் பிரபாஸ் திருமணம் நடக்கும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கும், பிரபாசுக்கும் காதல் எனவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர்கள் இருவருமே மறுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.