தீப்பற்றியெரிந்த வீடு..!! நாசமாகிப்போன பணம், நகைகள்..!!

யாழ்.உடுப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்று பெருமளவில் சேதமடைந்துள்ளது.குறித்த வீட்டில் உள்ள பூஜை அறையில் நேற்று மதியம் 11 மணியளவில் தீ பற்றியுள்ளது.

இதனால், அந்த வீட்டின் அறை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் 60,000 ரூபாய் பணம் மற்றும் 3 பவுண் நகைகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. தீ விபத்து இடம்பெற்ற வேளையில், குறித்த வீட்டில் ஆட்கள் இருந்த போதிலும், அவர்கள் எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததிருந்ததோடு, மின் ஒழுக்கால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.