தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரினால் நேற்று 6 இராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் மாணிக்கவாசகம் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
கைதான மீனவர்கள் 6 பேரும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.