தென்னிலங்கையில் பேஸ்புக் நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த களியாட்ட விருந்தினை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிய அளவிலானோர் கலந்து கொண்ட இந்த விருந்தை சுற்றி வளைத்த பொலிஸார் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் விஷ போதைப்பொருளுடன் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் எம்.டீ.எம் போதைப்பொருள் 160 மில்லிகிராம், கொக்கைன் 470 மில்லிகிராம், தீர்வை வரியற்ற சிகரெட்களும் இந்த விருந்தில் மீட்கப்பட்டுள்ளது.
பாரியளவிலான இளைஞர் யுவதிகள், விருந்தில் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் வெளி பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 32, 31 மற்றும் 38 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.