கடனால் சிதைந்த குடும்பம்; நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவானவரின் தாயும், மூத்த சகோதரனும் தற்கொலை செய்துகொண்டனர்.

ப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த ஆண்டாள் என்பவரின் இளைய மகன் ராஜ்குமார் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி ராஜ்குமார் பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கிவிட்டு மனைவியுடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடன் கொடுத்தவர்கள் ஆண்டாளையும் அவரது மூத்த மகனையும் நச்சரிக்கவும் மிரட்டல் விடுக்கவும் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆண்டாளும், அவரது மூத்தமகன் செல்வகுமாரும் கடந்த 21-ஆம் தேதி வெளியூருக்குச் செல்வதாக தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

ஆனால் அதன் பிறகு சில நாட்களில் அவர்கள் வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் தெரு முழுதும் வீசத் தொடங்கியதையடுத்து, வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் கதவை உடைத்து திறந்த போது ஆண்டாளூம் செல்வகுமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.