கை தவறிப் போனதால் பரிதாபமாகப் பறிபோன யுவதியின் உயிர்…!!

கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இளம் பெண் பட்டதாரிப் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதைனைத் தான் விதியென்பது.. ரயில் வரும் முன்பே தண்டவாளத்திற்கு அருகில் பாதுகாப்பாக நின்ற பெண் அதே ரயில் மோதி பலியாகிய பரிதாபம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது . ரயில் வருகின்றது என்ற தெரிந்து மோட்டர் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தும் இந்தப் பெண்ணுக்கு ரயிலில் மோதி பலியாக வேண்டும் என்ற விதியை மாற்றமுடியவில்லை.
ரயில் வரும் வேளையில் ரயில் சமிக்ஞைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ரயில் வரும் வேளையில் கை தவறி மோட்டார் சைக்கிள் இயங்கி, ரயில் வீதியை நோக்கி பயணித்துள்ளது.குறித்த நேரத்தில் கோட்டையில் இருந்து பயணித்த ரயிலில் மோதுண்டு, படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.கந்தான பிரதேசத்தை சேர்ந்த திலினி சத்துரிக்கா என்ற 25 வயதான பட்டதாரிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணின் தவறினாலேயே, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.