மனோ- காமினி இந்தியா விஜயம்!

இந்தியாவில் நடைபெறவுள்ள 5ஆவது சர்வதேச இந்து- பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவும் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பீஹார் மாநிலம்- ராஜ்கிரிலில் ‘தர்ம-தம்ம மாநாடு’ என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம்,  இந்த  இந்து- பெளத்த மாநாட்டினை நடத்தவுள்ளது.

அந்தவகையில் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுமாறு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளரும், இந்தியா பவுன்டேசனின் ஆளுநர் சபை உறுப்பினருமான ராம் மாதவ் விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இவர்கள் இருவரும் மாநாட்டில் கலந்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.