வெறுப்பான சேரன் எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 வது எவிக்‌ஷனை நெருங்கிவிட்டது. ஏற்கனவே பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டார்கள்.

இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும். இதற்கிடையில் கடந்த இரு நாட்களாக கிராமம் தீமில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் மீரா, சேரன் இடையே வாக்குவாதம் நடந்தது. மீரா தன் சொந்த விசயங்களை மனதில் வைத்துகொண்டு பழிவாங்குவது போலவும் அவமதிப்பது போலவும் செய்துவருகிறார். இதனால் சேரன் தற்போது வெறுப்பாகி இனி நான் யாரிடமும் பேசமாட்டேன், எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்க என கூறுகிறார்.