கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சாம்புரம் பகுதியை சார்ந்த பட்டதாரி அசோக் என்ற இளைஞன். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த இளம்பெண்ணிற்கும் இடையே நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நண்பர்களாகவே இருந்து வந்த நிலையில்., தோழியை அசோக் ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளான்.
தனது காதலை வெளிப்படுத்த பல முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் போயுள்ளது. இந்த நிலையில்., பெண்ணிற்கு திருமணம் செய்ய அவரின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யவே., பெண்ணிற்க்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த ஒருதலை காதலன் தோழியின் மனதை மாற்ற எடுத்த அனைத்து முயற்சியும் பலனளிமலால் போயுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அசோக் மது அருந்திய நிலையில் பெண்ணை பழிவாங்க திட்டமிட்டு., இனி நீயும் நானும் அதிகளவு சந்திக்க இயலாது. உன்னை நினைத்த நான் இனி வேறு பெண்ணை திருமணம் செய்யவும் மாட்டேன்., உன்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பிரிந்து செல்கிறேன் என்று கூறியுள்ளான். இவனது வார்த்தைகளில் உள்ள எண்ணத்தை அறியாத பெண் இறுதியாக பேசிவிட்டு செல்வோம் என்று எண்ணி இருந்துள்ளார்.
அங்குள்ள விடுதிக்கு சென்ற இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில்., நயவஞ்சகனின் திட்டப்படி காவல் துறையினருக்கு இவர்கள் இருந்த அறையில் விபசாரம் நடப்பதாக தெரிவித்திருந்துள்ளான். இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தும்., ஒருதலை காதலன் காவல் துறையினரிடம் ரூ.500 வழங்கி பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வந்தேன் என்று கூறியுள்ளான்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி கதறியளவே., அவருக்கு தெரியாமல் பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளையின் அலைபேசி எண்ணிற்கும் தவறான தகவலை வழங்கியுள்ளான். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் அசோக்கை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க உடன் பழகிய நண்பன் செய்த செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.