குடும்பத்துடன் நிர்வாண நடனம்.. குடும்பமே சேர்ந்து செய்த அதிரவைக்கும் காரியம்.!

அசாம் மாநிலத்தில் உடல்குரி மாவட்டத்தில் உள்ள கலைகோன் பகுதியை சேர்ந்தவர் ஜாதவ் சஹாரியா. இவருக்கு பில்லி சூனியத்தில் அதிக அளவில் நம்பிக்கை உள்ளது.

இதற்காக உள்ளூரை சேர்ந்த சிறுவன் ஒருவனை நரபலி கொடுக்க முடிவு செய்து உள்ளார். இதற்கு அந்த சிறுவனின் பெற்றோர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தங்களது வீடு மற்றும் இரு சக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்திவிட்டு நிர்வாணமாக நடமாடியுள்ளார்.

மேலும், சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி செய்தபோது அதை தடுக்க சென்ற பொது மக்கள் மீது பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளது. அவரை தடுக்க முடியாது உள்ளூர் வாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சாமியார் கோஷ்டியை கைது செய்ய முயற்சி செய்தனர்.

இதனால் அவர்கள் காவல்துறை மீது தாக்குதல் நடத்த முயன்றனர். வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனை மீட்டனர். அந்த சிறுவன் ரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அந்த சாமி கும்பல், அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்தனர்.