களமிறங்க போகும் அதிரடி வீரர்.? டீன் ஜோன்ஸ் அட்வைஸ்.!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்திய அணியில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டு என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியவை, இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இருப்பினும் அந்த அணியின் நான்காவது வரிசையில் பேட்ஸ்மேன்கள் சரியாக அமையவில்லை. தற்போது உலக கோப்பை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் இந்திய அணி நான்காவது வரிசையில் தோனியை களமிறக்குவது, இந்திய அணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

இதைப் போன்ற ஜடேஜா இந்திய அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும். இங்கிலாந்து ஆடுகளங்கள் இது போன்ற மிகப்பெரிய போட்டித் தொடரின் பிற்பகுதியில் சற்று மந்தமடையும், இதனால் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும். அதிலும் ஜடேஜா இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருப்பதால் கூடுதல் பலம். அவருடைய அதிரடி பேட்டிங் கடைசிக் கட்டத்தில் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று கூறினார்.