வெங்காய வெடியை வெடிக்கச் செய்து மனைவியைக் கொன்றவர் கைது…!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்கச் செய்து மனைவியைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படடு வந்தவர் இன்று (23) செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண் ஒருவர் வெங்காய வெடியை முகத்தில் வெடிக்க வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவன் தலைமைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், இன்று செட்டிகுளம் ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஆலயத்தின் பின்புறமான காட்டுப் பகுதிக்குள் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கையிலும் வெங்காய வெடி காரணமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸ் பாதுகாப்புடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.