கடலில் குடும்பத்துடன் நீராடியவர்களுக்கு ஏற்பட்ட அவலம்!

மாத்தறை, கிரிந்த பொலிஸ் பிரிவுக்குபட்டபட்ட யால கடலில் குடும்பத்துடன் நீராடிய இருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், மேலும் தாயும் மகளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.