இந்திய கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டு விளையாட தடை.!

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராசிக் சலாம் 17 வயதான இவர், ஒரு போட்டியில் மட்டுமே வியாடியுள்ளார். பெரிய அளவில் விக்கெட்டுக்கள் வீழ்த்த வில்லை என்றாலும், அவரது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.

இந்நிலையில் ராசிக் சலாம் வயது தொடர்பான சான்றிதழில் முறைகேடு நடந்துள்ளதாக பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்திய அணியில்19 வயதிற்கு உட்பட்டோருக்கான இங்கிலாந்து தொடரில் தகுதி பெற்று இருந்தார். தற்போது சலாமுக்குப் பதில் பிரபாத் மயுரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு ஜாம்மு-காஷ்மீர் மாநில கல்வித்துறை அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி இருந்தது. அதில் அவர் கிரிக்கெட் சங்கத்திற்கும் அனுப்பிய வயது தொடர்பான தகவலும், 10-ம் வகுப்பு சான்றிதழில் இருந்த பிறந்த நாள் தேதியும் ஒன்றாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.