இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடப்பது என்பது தான் பெரும் அதிர்ச்சியை தருகிறது.
இந்த நிலையில்., திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வரும் இளம் பெண்களை தயாரிப்பாளர்கள்., இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என பெரும்பாலானவர்கள் எந்த விதமான கூச்சமின்றி., படுக்கைக்கு அழைப்பது கடந்த சில காலங்களாக தொடர்கதையாகியுள்ளது.
இது குறித்த சர்ச்சையான ட்விட்டர் பக்கத்தில் மீ டூ என்ற ஹேஸ்டேக்குடன் வைரலாக தொடங்கியது. இந்த நிலையில்., நடிப்பதற்கு திரைப்படத்தில் கேட்டு வந்த மாடல் அழகியை தயாரிப்பாளர் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் வசித்து வரும் மாடல் அழகி திரைத்துறையில் நடிப்பதற்காக திரைத்துறையில் பிரபலமானவர் என்று கூறப்படும் தயாரிப்பாளருடன் அறிமுகம் கிடைத்தது.
இதனையடுத்து தயாரிப்பாளராக அறிமுகம் செய்துகொண்ட நபர்., திரைப்படம் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில்., அங்கு பிரபல இசையமைப்பாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில்., இவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த நிலையில்., மற்றொரு உதவி இயக்குனரின் திரைப்படத்திற்கு வாய்ப்பு தருவதாக கூறி விருந்து வைத்துள்ளனர்.
இந்த சமயத்தில்., சமையலறைக்கு எழுந்து சென்ற நடிகையை பின்னால் சென்ற தயாரிப்பாளர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியேற முயன்றுள்ளார். சம்பவ இடத்தை விட்டு வெளியேற முயன்ற நிலையில்., எதிர்பாராத விதமாக அவர் மயக்கம் அடைந்துள்ளார்.
இதற்குப் பின்னர் நடிகையை தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில்., மயக்கம் தெளிந்த நிலையில் தனக்கு நடந்த கொடுமையை உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இவரின் புகாரை ஏற்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் நடிகைக்கு அளிக்கப்பட்ட விருந்தில் உணவில் மயக்க மருந்து கலந்து அவரை கற்பழித்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவமானது மீண்டும் பரபரப்பை திரைத்துறையில் ஏற்படுத்தி உள்ளது.