பால் கொடுத்த தாய்: பொலிஸ் நடவடிக்கையால் கொதித்தெழுந்த தாய்மார்கள்..

அமெரிக்காவில் பொது நீச்சல் குளத்தில் தாய்ப்பால் கொடுத்த பெண்ணை, அங்கிருந்து வெளியற்றியதால் அவருக்கு ஆதரவாக பல தாய்மார்கள் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டி டாகிராகக்ஸ் (32) என்கிற தாய் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் பொதுவெளியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவருடைய 10 மாத குழந்தைக்கு பசி எடுத்ததால், அங்கயே தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இதனை பார்த்த செக்யூரிட்டி, தாய்ப்பால் கொடுக்க அனுமதியில்லை எனவும், ஆடையை உடனடியாக மூடுமாறும் கூறியுள்ளார்.

இதை யார் கூறியது, ஒரு தாய் எங்கு வேண்டுமானாலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என மிஸ்டி கூறியுள்ளார். அங்கிருந்து கிளம்பிய செக்யூரிட்டி, மேலாளரை அழைத்து வந்தார். இங்குள்ள விதிகளின் படி தாய்ப்பால் கொடுக்க அனுமதி இல்லை. நீங்கள் உங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள் என மேலாளர் கூறியுள்ளார்.

ஆனால் மிஸ்டி மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே மேலாளர் கொடுத்த தகவலின்படி அங்கு வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு மிஸ்டியை அங்கிருந்த கிளம்ப வேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட மிஸ்டி கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மிஸ்டி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, அவருக்கு ஆதரவாக பல தாய்மார்கள் திரண்டு நீச்சல் குளத்தின் தாய்ப்பால் கொடுத்து முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அதேசமயம் அன்று நடந்த சம்பவம் குறித்த வீடியோவினை நகர பொலிஸாரும், தங்களுடைய பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து மிஸ்டியின் செயலை பலரும் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நகர மேயர் மத்தேயு டயல், தாயாக இருக்கக்கூடிய ஒரு பெண் எந்த இடத்திலும் தாய்ப்பால் கொடுக்கலாம். இதற்காக அவர் அனுமதி வாங்கவேண்டும் என எந்த சட்டமும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.