பா.ரஞ்சித்தை கடுமையாக எச்சரிக்கும் அதிமுக எம் எல் ஏ.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கிய ரஞ்சித் அரசியல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இந்நிலையில், பா. ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ராஜராஜசோழன் தங்கள் சமூகத்தின் நிலத்தை அபகரித்து விட்டதாக கூறினார்.

இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் பலரும் ட்விட்டரில் ரஞ்சித்தை கலாய்த்து வருகின்றனர். #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர். இது இந்திய அளவில் டிரெண்டானது.

இவ்வாறு, ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து எம் எல் ஏ கருணாஸ், ” முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம். தமிழர் மரபின் உச்சம் நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள். பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது அறிவுரை கலந்த எச்சரிக்கை” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.