சினிமா பாணியில் நடந்த பயங்கரம்…

தேனி மாவட்டத்தில் வாயிற்கதவில் கட்டிவைத்து இளைஞர் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அருகே, இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்ததால் அடையாளம் காண முடியாமல் திணறினர்.

அந்த இளைஞர் அங்கிருந்த வாசற்கதவில் கட்டிவைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கொலை செய்யப்பட்ட இளைஞர் மற்றும் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.