புதுப்பெண்ணுக்கு பட்டப்பகலில் நடந்த கொடூரம்… வெளியான வீடியோ

இந்தியாவில் புதுப்பெண்ணை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் பொதுவெளியில் கொடூரமாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் பொதுவெளியில் புதுப்பெண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கொடூரமாக அடித்து உதைத்தனர்.

இதையடுத்து அங்கு மக்கள் கூடிய நிலையில் அப்பெண் மீட்கப்பட்டார்.

அவர் கூறுகையில், என்னிடம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தார் அடித்து உதைத்தார்கள்.

நான் பணம் கொடுக்கவில்லை என்றால் விவாகரத்து கொடுக்க வேண்டும் என மிரட்டுகிறார்கள் என கூறினார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோவை காண