கூட்டு படைகளால் நடத்தப்பட்ட வேட்டை.!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி., அங்குள்ள பகுதிகளை கைப்பற்றி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில்., பயங்கரவாதிகளின் மீது எந்த விதமான ஈவு இரக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்க கூறி., இராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு அந்நாட்டின் இராணுவ படையினர் மற்றும் அமெரிக்க நாட்டின் நோட்டா படையினர் சேர்ந்து., பயங்கரவாதிகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் நிலையில்., தற்போது பயங்கரவாத தளபதிகளை கொன்றுள்ளனர்.

அங்குள்ள கந்தகார் மாகாணத்தில் உள்ள காக்ரிஸ் மாவட்டத்தில் இருக்கும் பகுதியில் கூட்டுப்படைகள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சமயத்தில்., கூட்டு படைகளுக்கும் – பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டின் முடிவில் குலாம் மற்றும் முஸ்தபா என்ற இரண்டு பயங்கரவாத தளபதிகள் மற்றும் 15 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.