ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தங்கமங்கை…

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தற்போது ஊக்கமருந்து சோதனயில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியாகும் பட்சத்தில் இவருக்கு 4 ஆண்டு தடைவிதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இந்தியத் தடகள சம்மேளனம் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

ஆனால் இந்த குற்றச்சாட்டை கோமதி மறுத்துள்ள கோமதி கூறுகையில், ‘ இந்த விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தவேண்டும் என தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். என் வாழ்நாளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை நான் பயன்படுத்தியதில்லை.  ஆசிய தடகளப் போட்டியின் போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் பயன்படுத்தினேன். ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு. ’ என்று தெரிவித்துள்ளார்.