அதிர்ச்சியில் உறைய வைக்கும் உண்மை சம்பவம்!!

சவுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை செய்து வந்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக அவர் அங்கு வேலை செய்து வருகின்றார். ஆனால், சமீபத்தில் 1.1 லட்சம் ரியால் ஹோட்டல் கடையிலிருந்து திருட்டு போனது.

இதற்கு இவர்தான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞருக்கு சவுதி அரசாங்கம் தண்டனையளிக்க முடிவெடுத்தது. ஆனால் இளைஞரை சவுதிக்கு அழைத்து சென்ற நண்பர் திருடப்பட்ட பணத்தை திருப்பி கொடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், அதை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதனால், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞரின் அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திருடுபோன பணம் கிடைத்துள்ளது. இது நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ஆலப்புழா இளைஞர்கள் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது.

இதனால் சவுதி குற்றவியல் நீதிமன்றம் ஒரு அதிர்ச்சி அளிக்கும் தண்டனையை அவருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. அது என்னவென்றால் திருடிய அவரின் கைகளை வெட்ட உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.