மாமனாரை, தாயுடன் சேர்ந்து உயிரோடு எரித்து கொன்ற மருமகள்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள நெமிலிகாலனி ராஜாத்தி தெருவை சேர்ந்தவர் சபாபதி. 68 வயது நிறைந்த இவர் விவசாயம் சம்பந்தப்பட்ட கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மகன் பிரபாகரன். இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்குமுன்பு பிரபாகரன் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் கோபமடைந்த காயத்திரி கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் தனியாக தவித்து வந்த பிரபாகரனுக்கு அவரது தந்தை சபாபதி, கடந்த சில மாதங்களுக்குமுன்பு வேறு ஒரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த காயத்திரி தன் தாய் கலைவாணியுடன் கணவர் மற்றும் மாமனாருடன் சண்டை போட்டுள்ளார்.

இந்தநிலையில்தூங்கிக்கொண்டிருந்த மாமனார் மீது திடீரென காயத்திரியும், அவரது தாயார் கலைவாணியும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் தீயில் கருகிய சபாபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சபாபதி இறுதி வாக்குமூலம் அளித்துளளார் . பின்னர் அவர் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து காயத்திரி மற்றும் அவரது தாயார் கலைவாணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.