சொந்த சித்தியே காதலனை விட்டு சீரழித்த கொடூரம்!

இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு இரையாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது சித்தி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பிரபல கோயிலுக்கு தமது 16 வயது சித்தியுடன் ஆராதனைக்கு சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி.

கோயிலில் இருந்து திரும்பி வரும் வழியில் இரு இளைஞர்கள் சிறுமியை வழிமறித்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று சிறுமியை வன்புணர்வுக்கு உள்ளாக்கி, பின்னர் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், சிறுமியை சீரழித்தவர்களில் ஒருவர் அவரது சித்தியின் காதலர் என கண்டறிந்தனர்.

மேலும், அவரே தமது உறவினரை காதலனுக்கு விருந்தாக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது அந்த மாநிலத்தில் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.