இனப்பெருக்கத்தை அழிக்கும் மாத்திரைகள்.. பயங்கரவாதிகளின் சதி..?

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆபத்தான மாத்திரைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் அதில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகை தாக்குதலுடன் தொடர்புடைய ஐ.எஸ் பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையிலிருந்து இந்த மாத்திரைகளை காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

5 கருகலைப்பு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கொழும்பில் மீட்கப்பட்ட இந்த மாத்திரைகள் சுமார் 40 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை குடிக்கும் பெண்களுக்கு வாழ் நாள் முழுவதும் குழந்தை பெற முடியாத நிலை ஏற்படும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.