கனடாவை அச்சுறுத்தும் வெள்ளப்பெருக்கு

கனடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கியூபெக் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரையில் 40 இற்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு கியூபெக் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 9 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.