கனேடியர் உள்ளிட்ட மூவர் ஆயுத முனையில் கடத்தல்!

நைஜீரியாவில் கனேடியர் உள்ளிட்ட மூவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச விவகாரங்களுக்கான கனேடிய அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

எண்ணெய் உற்பத்தி நிலையம் ஒன்றில் பயணியாற்றிவந்த மூன்று பணியாளர்களே இவ்வாறு ஆயுதமுனையில் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கடத்திச்செல்லப்பட்டுள்ள மூவரையும் மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, நைஜீரியாவில் கனேடியர் உள்ளிட்ட மூவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளமைக்கு இதுவரையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.