வத்தளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றை பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
வத்தளை மாபாகே பகுதியிலுள்ள நவலோக மைதானத்தின் அருகிலேயே குறித்த சந்தேகத்திற்கிடமான வேனொன்று பரிசோதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவத்தால் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையினை முப்படையினரும் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, அப்பகுதிக்கு பொது மக்கள் யாரையும் செல்ல வேண்டாம் என்று அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.