இரு முறை கூடிய அவசர அமைச்சரவை

நாட்டில் ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களுக்காக அமைச்சரவை கூட்டங்கள் நேற்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடல்கள் ஜனாதிபதி நாட்டில் இருந்திராத காரணத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றன.

இதன்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல்களை அடுத்து பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று இரவு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தலைவர் இரா, சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரிடம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக, அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து பிரதமர் குறிப்பிட்டார்.

குறித்த தாக்குதல்களுக்கு சர்வதேச காவற்துறையினரின் ஒத்துழைப்பு நாடப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.