தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த வரமிளகாய் கோழி வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 250 கிராம்,
வரமிளகாய் – 10,
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 100 மி.லி.கிராம்,
உப்பு – தேவைக்கு.
கொத்தமல்லி – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
தனியா – 5 கிராம்.
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
கடாயில் வரமிளகாய், தனியாவை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
சிக்கன் வேக சற்று தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமாக தீயில் வேக விடவும்.
அடுத்து அதில் பொடித்த மசாலாவை போட்டு நன்றாக கிளறி விடவும்.
சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் இணைந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.
சூப்பரான வரமிளகாய் கோழி வறுவல் ரெடி.