யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்..

யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.