பிரபல சீரியல் நடிகை இருவர் சாலை விபத்தில் மரணம்..

தெலுங்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளாக திகழ்ந்தவர்கள் நடிகை அனுஷா ரெட்டி, பார்கவி இவர்கள் இருவரும் ஒரே காரில் ஹைதாராபாத்தில் பட பிடிப்பை முடித்துவிட்டு வந்துள்ளனர்.

அப்போது இவர்கள் வரும் வழியில் ஒரு லாரி வந்துள்ளது, அவர்களின் கார் ஓட்டுநர் லாரிக்கு வழிவிட வேண்டும் என்பதற்க்காக காரை திருப்ப அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது.

இதில் நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இது தெலுங்கு திரையுலகில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.