கலைஞரின் மகன் முக ஸ்டாலினின் பரிதாப நிலை.!

தமிழகத்தில் வரும் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18 நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தாங்காது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தொலைக்காட்சி, திரையரங்கம், சமூகவலைத்தளங்கள், செய்தி ஊடகங்களிலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இதில், திமுகவின் பிரச்சார விளம்பரம் மக்களிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவன் என்று கூற வேண்டிய முக ஸ்டாலின், நான் கலைஞரின் மகன் என்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது கேலி கூத்தாக உள்ளது. மேலும் அக்கட்சியின் சுயமரியாதை கொள்கைக்கு இது எப்படி பொருந்தும் என்று தெரியவில்லை.

முக ஸ்டாலினுக்கு, 70 வருட பாரம்பரிய ஒரு கட்சியின் தலைமை என்று கூற கூட தகுதியில்லையா என்ற கேள்வியையும் பெரும்பாலான மக்கள் முன் வைக்கின்றனர். அவருக்கென்று எந்த தகுதியும் இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.

நான் கலைஞரின் மகன் என்று சொல்வதைவிட, நான் துணை முதல்வராக இருந்தவன், தமிழகத்தில் 30 வருடகாலம் ஆட்சி செய்த திமுகவின் தலைவராக உங்களிடம் கேட்டு கொள்கிறேன். வரும் காலங்களில் திமுகவின் பொன்னான ஆட்சியை மீண்டும் நான் தருவேன் என்று சொல்லாமல், ஒரே வார்த்தை ”நான் கலைஞரின் மகன்” என்று தன சுய தகுதிகளை இழந்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்வது, திராவிடத்திற்கே வந்த சோதனை என்றும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இன்னமும் கலைஞருக்காக வாக்களியுங்கள் என்று மேடைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின் அவர்கள், வெற்றி பெற்றதும், நலத்திட்டங்களை கலைஞரே உங்களுக்கு செய்வார் என்று சொல்லுவாரோ என்ற குழுப்பதில் மக்கள் உள்ளனர்.

ஒருவேளை திமுக வாரிசுகளுக்கான அரசியல் கட்சி என்பதை மக்களுக்கு உணர்த்த நான் கலைஞரின் மகன் என்று கூறியுள்ளாரோ?..

குறிப்பு: ஒரு தகப்பனுக்கு ஆகச்சிறந்த வெகுமதி, ”இவர் தான் இவரின் தந்தை” என்று கூறுவது. நான் இன்னாரின் மகன் என்று தன் மகன் சொல்வதை, எந்த தகப்பனும் வெகுமதியாக ஏற்று கொள்ளமாட்டார்கள் தானே…