கடைசி நேரத்தில் பின்வாங்கிய வேட்பாளர்கள்.! ஆடிப்போன காங்கிரஸ்.!!

மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இங்கு 4-ம் கட்ட தேர்தல் 29-ந் தேதி நடக்கிறது.

ஒடிசாவில் பர்சானா, நிமாபாரா ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக சீதாகந்த் மோகபத்ரா, சத்யபிராத் பத்ரா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் போட்டியிட முடியாது என நேற்று முன்தினம் இரவு திடீரென பின்வாங்கியுள்ளனர்.

இதையடுத்து, இரண்டு தொகுதிகளில் புதிய வேட்பாளர்களாக அஜய் சமால், திலீப் நாயக் ஆகியோர் அறிவிக்கப்பட்டு, நேற்று கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே ஒடிசா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த 4 பேர் போட்டியிட மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.