பரிதாபமாக பலியான உயிர்., அலட்சியமாக கணவன்.!

சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் 23 வயதுடைய மெரிட் கென் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சார்ந்த எரிக் லென் என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது)

திருமணம் முடிந்த நாட்களில் இருந்து இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில்., கடந்த அக்டொபர் மாதத்தில் கர்ப்பிணியாக எரிக் லென் இருந்த சமயத்தில் இவர்கள் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மெரிட் கென் தனது மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் அடி வயிற்றில் சுமார் 10 முறை எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு பிறப்புறுப்பில் இரத்த கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மயங்கி விழுந்தார்.

இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயிற்றுக்குள்ளேயே கருச்சிதைவு ஏற்பட்டு பரிதாபமாக குழந்தை உயிரிழக்கவே., நீண்ட நாட்கள் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் இந்த சம்பவம் காவல் துறையினருக்கு தெரிய வரவே., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்த நிலையில்., குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு மெரிட் கேனிற்கு சுமார் 3 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 1200 பிராங்குகள் (இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரத்து 434) வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.