வேலூர் மாவட்டத்தில் உள்ள நெமிலியை அடுத்துள்ள சிறுவளையத்தை சார்ந்தவர் சிட்டிபாபு (வயது 45). இவர் தையல் தைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பெங்களூரை சார்ந்தவர் அலமேலு. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., திருமணம் முடிந்த நாட்களில் இருந்தே கணவனின் நடவடிக்கையில் அலமேலுவிற்கு சந்தேகம் இருந்துள்ளது.
கணவனின் மீதுள்ள சந்தேகம் உறுதிப்படும் வகையில் அவருக்கு இருக்கும் கள்ளக்காதல் விவகாரம் அலமேலுவிற்கு தெரியவரவே., கணவரிடம் சண்டையிட்டு பெங்களூரில் இருக்கும் தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள வெம்பாக்கத்தை அடுத்துள்ள புதூர் காலனியை சார்ந்தவர் மஞ்சுளா (வயது 42). அதே பகுதியை சார்ந்த மாரி என்பவருக்கும் மஞ்சுளாவுக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்., மஞ்சுளாவின் மீது சந்தேகம் கொண்ட மாரி., அடிக்கடி இது குறித்து மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரமடைந்த மஞ்சுளா தந்து தாயாரின் இல்லத்திற்கே திரும்பி வந்துள்ளார். அந்த வகையில்., சிறுவளையம் கிராமத்தில் இருவரும் இருந்த சமயத்தில்., இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். நேற்று மஞ்சுளாவின் இல்லத்திற்கு சென்ற சிட்டிபாபு., மஞ்சுளாவை அழைத்து கொண்டு அங்குள்ள பம்பு செட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இவர்கள் இருவருக்கும் திடீரென கைகலப்பில் ஈடுபடத்துவங்கியதை தொடர்ந்து., அங்கிருந்த கயிற்றை எடுத்து சிட்டிபாபுவின் கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதனால் மூச்சு திணறல் அடைந்த சிட்டிபாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து சிட்டிபாபுவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., மஞ்சுளாவை கைது செய்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.