தூக்கிட்டு இளம் தாய் மற்றும் மகன் தற்கொலை!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொட, மஹவலதென பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

26 வயதுடைய பெண் ஒருவரது சடலமும் 5 வயதுடைய குறித்த பெண்ணின் மகனின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.