உயிருடன் அண்ணனின் மனைவியை எரித்துக்கொன்ற் நபர்!

பெங்களூரில் சொத்து பிரச்சனை காரணமாக 52 வயது பெண்மணி உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அம்புஜம்மான் என்பவரின் கணவர் நாகண்ணா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். தனது கணவருக்கு சேர வேண்டிய சொத்தினை தனக்கு கொடுக்கும்படி கணவரின் அண்ணன் ராமைய்யாவிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்

சொத்து பிரச்சினை காரணமாக அம்புஜம்மாவுக்கும், ராமைய்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் ராமைய்யாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அம்புஜம்மாவுக்கு 2 ஏக்கர் நிலத்தை கொடுத்தனர்.

நிலத்தை எழுதி கொடுத்த பின்னரும், அந்த நிலம் தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி பிரச்சனை செய்துவந்துள்ளார் ராமைய்யா.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, அம்புஜம்மாவின் வீட்டுக்கு சென்ற ராமைய்யா மண்எண்ணெயை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார். இதில் உயிருக்கு போராடிய அம்புஜம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அம்புஜம்மா இறப்பதற்கு முன்னர் நடந்தவை குறித்து பொலிசில் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். ராமைய்யா, அவரது மனைவி சிவம்மா, பாபு, மஞ்சு, சித்தேகவுடா ஆகிய 5 பேரும் தான் காரணம் என்றும், அவர்கள் தான் தனது உடலில் தீவைத்ததாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமைய்யா, பாபு, மஞ்சு, சித்தேகவுடா ஆகிய 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர், அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.