நடுசாலையில் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞன்!

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் பரபரப்பான சாலையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கொச்சியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான கட்டத்தில் குறித்த இளம்பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உடலின் 65 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.

ஆனால் புதனன்று பகல் ரத்த அழுத்தம் அதிகரிக்கவும், இருதயத்தின் செயல்பாடு மிகவும் மோசமடையவும் நேர்ந்துள்ளது.

இந்த நிலையிலேயே அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் குடும்பத்தாரை தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி திருமண கோரிக்கையுடன் அணுகிய இளைஞருக்கு மறுப்பு தெரிவித்த நிலையில்,

ஆத்திரமடைந்த அந்த இளைஞன் தம்மிடம் இருந்த பெட்ரோல் போத்தலை அந்த இளம்பெண் மீது ஊற்றியுள்ளார்.

பின்னர் பரபரப்பான அந்த சாலையின் நடுவே தீ கொளுத்திவிட்டு தப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 18 வயது ரெஜி மாத்யூ என்ற இளைஞரை திருவல்லா பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவல்லா பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் மரணமடைந்த குறித்த இளம்பெண்.